புதிய உலகம்.கொம்
வினோத செய்திகள்
அறிவியல் செய்திகள்
ஆய்வு செய்திகள்
மருத்துவசெய்திகள்

தனது எதிர்காலத்துக்காக எதிர்நீச்சல் போடும் குழந்தை

இதயக்கோளாறுடன் பிறந்த றொஷானா ஒக்டென் என்ற சிறுமிக்கு பிறந்த ஆறு வாரங்களிலேயே இதய சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இதனால் வலுவான இதயத்துடிப்பை ஏற்படுத்துவதற்காக நீச்சலில் ஈடுபடுவதற்கு வைத்தியரினால் பரிந்துரைக்கப்பட்டது. எனவே அடுத்த மாதத்துடன் இரண்டு வயதாகும் இந்த நேரத்தில் தனது வெளிச்சமான எதிர்காலத்திற்காக சிறுவயதிலேயே நீச்சலடிக்கத் தொடங்கிவிட்டார் றொஷானா.


இதுபற்றி அவரது தாயாரான 26 வயதுடைய சானம் கூறுகையில், அது ஒரு பயங்கரமான தருணமாக இருந்தது என்றும் சத்திர சிகிச்சை மேற்கொள்ளாதிருந்திருந்தால் இன்று இவள் உயிருடன் இருந்திருக்க மாட்டாள் என்றும் தெரிவித்திருக்கிறார்.

கல்யாணம் பண்ணுங்க ஹார்ட் அட்டாக் வராது!–ஆய்வில் தகவல்

திருமணம் செய்துகொள்வது ஆண்களுக்கு அவசியமான ஒன்று அதனால் இதயநோய் வருவது கூட தடுக்கப்படுவதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. மணமாகாத ஆண்கள் எல்லாம் சந்தோசமாக பேச்சிலர் வாழ்க்கையை கைவிட்டு விட்டு குடும்பத்தஸ்தர் ஆகலாம் என்று சந்தோச முழக்கமிட்டுள்ளனர் ஆய்வாளர்கள்.

திருமணம் குறித்தும் குறிப்பாக திருமணத்தினால் ஆண்களுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்தும் புதிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்பொழுது தனியாக வாழும் ஆண்களை விட திருமணம் செய்து கொள்ளும் ஆண்களுக்கு இதயநோய் பாதிப்பு ஏற்படுவது குறைந்துள்ளது தெரியவந்தது.

பேச்சிலர்ஸ், விவாகரத்து ஆனவர்கள், மனைவியை இழந்தவர்கள் ஆகியோர்களைவிட மனைவியோடு வாழ்பவர்களுக்கு இதயநோய் ஏற்படுவதில்லையாம். ( மனைவியோடு சண்டை போட்டு இதயநோய் வருதே என்ன செய்ய? என்று கேட்பவர்கள் விதிவிலக்கானவர்கள் )

கனடாவைச் சேர்ந்த 4403 இதய நோயாளிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்களில் 33 சதவிகிதம் பேர் பெண்கள். இவர்களில் திருமணம் முடித்தவர்களை விட விவாகரத்தானவர்கள், மனைவியை இழந்தவர்கள், தனியாக வசிப்பவர்களுக்கு இதயவலி தொடர்பான நோய்கள் அதிகம் ஏற்பட்டது கண்டறியப்பட்டது.

இதிலிருந்து வாழ்க்கைத் துணைவியின் மூலம் கணவரின் நலன் பாதுகாப்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கணவரின் உடல் நலனில் அக்கறையோடு செயல்பட்டு அவருக்கு தேவையானதை பார்த்து பார்த்து செய்து கொடுப்பதினாலேயே ஆண்களுக்கு இதயநோய் ஏற்படுவதில்லையாம்.

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று சும்மாவா சொன்னார்கள். எனவே ஆண்களே திருமணம் என்றாலே அலறவேண்டாம். உங்களை கவனிக்க அக்கறையான ஒருவர் வரப்போகிறார் என்று உற்சாகத்துடன் திருமணத்திற்கு தலையாட்டுங்கள்.

இங்கிலாந்தில் பெண்ணாக மாறிய 5 வயது சிறுவன்!!

இங்கிலாந்தில் உள்ள லண்டனை சேர்ந்தவர் டாரென்(41). இவரது மனைவி தெரசா(32). இவர்களது மூத்த மகன் ஷாஜெரி ஜாக் ஏவெரி(5). இவர்களுக்கு அலெக்ஸ் என்ற மற்றொரு மகனும் இருக்கிறான்.

ஷாஜெரியின் 3-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அப்போது அவன் தான் ஆண் அல்ல, பெண் என்பதை உணர்ந்தான். தனது பெற்றோரிடம் நான் பெண் குழந்தை என கூறி அடம்பிடித்தான்.

ஆண் குழந்தைகள் விளையாடும் பொம்மையை தூக்கி எறிந்து விட்டு பெண் குழந்தைகளுக்கான பொம்மையை எடுத்து விளையாட தொடங்கினான். அவனின் இந்த நடவடிக்கைகள் பெற்றோருக்கு அதிர்ச்சியையும், கவலையும் ஏற்படுத்தியது.

உடனே, அவனை மனோதத்துவ மருத்துவரிம் அழைத்து சென்றனர். அவனை பரிசோதித்த மருத்துவர் அவன் ஆண் குழந்தையாக இருந்தாலும், பெண் குழந்தை என அவனது மூளையும், மனதும் சொல்கிறது.


எனவே அவன் மனதளவில் பெண் குழந்தைதான் என்று தெரிவித்தார். அதைத் தொடர்ந்து அவன் தனது 5 வயதில் பெண்ணாக மாறினான். பெண் குழந்தைகளுக்குரிய ஆடைகள், அணிகலன்களை அணிகிறான். நீண்ட முடி வளர்த்து இருக்கிறான்.

மேலும் தற்போது அவன் படிக்கும் பள்ளியில் ஆண், பெண் இருபாலருக்கான கழிவறையை பயன்படுத்தி வருகிறான். அவனது இந்த நடவடிக்கைக்கு பெற்றோர் சம்மதித்து பெண் குழந்தையாக வளர்த்து வருகின்றனர்.

புடவை கட்டும் பெண்களே உங்களுக்கு ஆபத்து..??

நீங்கள் காலம் காலமாக புடவை கட்டுபவரா அப்படியானால் அடுத்த முறை புடவை கட்டும்போது மிகவும் கவனமாகக் கட்ட வேண்டும். காரணம் இருக்கிறது... உள்பாவாடை நாடாவை இறுக்கிக் கட்டுவதால் தோல் பாதிக்கப்பட்டு புற்றுநோய் வரக்கூடும் என்று எச்சரிக்கிறது இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன் ஆய்வு.

இப்பிரச்னையால் 3 பெண்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவதாக இன்னொரு குண்டு போட்டுள்ளார் மும்பை கிராண்ட் மருத்துவக்கல்லூரி பேராசிரியர் ஜி.டி.பாக்ஷி புடவை கட்டினால்கூட புற்றுநோய் தாக்குமா, என்ன ஆச்சரிய அதிர்ச்சியோடு சரும சிகிச்சை நிபுணர் முருகுசுந்தரத்தை அணுகினோம்.

தமிழ்நாட்டில் 70 சதவிகித பெண்களின் பாரம்பரிய உடை புடவை. பண்டிகை, திருமணம் போன்ற விசேஷங்களுக்கு புடவை கட்டுவது காலம் காலமாக சம்பிரதாயம். புடவை நழுவாமல் இருக்க உள்பாவாடையை இறுக்கிக் கட்டுவது வழக்கம்.

அதனால் இடுப்பு பகுதியில் தழும்பு அல்லது சருமம் கருப்பாக மாறுமே தவிர, என் மருத்துவ அனுபவத்தில் சேலை புற்றுநோய் பாதிப்பை கேள்விப்பட்டது கிடையாது. தழும்பு மற்றும் சரும பிரச்னை உள்ளவர்கள், பாவாடை நாடாவை தளர்வாகக் கட்டிக் கொள்ளலாம்.

மெல்லிய நாடாவுக்கு பதில் பட்டை போல வைத்துக்கொண்டால், தழும்பு ஏற்படாது. ஒரே இடத்தில் கட்டாமல், பாவாடை முடிச்சை மாறி மாறி கட்டலாம் என்கிறார்.

பொதுவாக மார்பகம் மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் பெண்களை அதிகம் பாதிக்கும் நோய். புடவை கட்டுவதால் இடுப்புப் பகுதியில் புற்றுநோய் ஏற்படும் என்பது புதிய தகவல். அந்த பிரச்னையோடு இதுவரை யாரும் வந்ததில்லை. சிலருக்கு சருமத்தில் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம்.

பாதிக்கப்பட்ட பகுதியை பாவாடை நாடா கொண்டு இறுக்கும்போது, நோயின் தன்மை வெளிப்பட்டு இருக்கும் என்கிறார் சென்னை புற்றுநோய் மையத்தின் புற்றுநோய் நிபுணர் டாக்டர் சாகர்.

புடவை பெண்களுக்கு டாக்டர் டிப்ஸ்


பாவாடை நாடாக்களை இறுக்கிக் கட்டக்கூடாது.
பாவாடை நாடாவை மெல்லிய கயிறால் கட்டாமல் பட்டையான கயிறு கொண்டு கட்டலாம்.
பாவாடைக்குக் கயிறு பயன்படுத்தாமல், பட்டையாக பெல்ட், லூப் போல தைத்துக் கொள்ளலாம். நாடா பட்டையாக இருப்பதால் அழுத்தம் மற்றும் தழும்பு ஏற்படாது.
ஒவ்வொரு முறை புடவை கட்டும்போது பாவாடை முடிச்சை வலது, இடது என மாற்றி கட்டிக் கொள்ளலாம்.
சருமத்தில் தழும்பு ஏற்பட்டால் உடனடியாக சரும நிபுணரை அணுகவேண்டும்.

உண்ணாவிரதம் இருப்பதால் நீண்டநாள் வாழலாம் : ஆய்வு

உண்ணாவிரதம் இருப்பது உடம்புக்கு நல்லதா கூடாதா என்று கேட்டால் பலர் கூடாது என்றே சொல்வார்கள். லண்டனில் உள்ள ஒரு நிறுவனம், சமீபத்தில் இது குறித்து ஒரு ஆய்வு மேற்கொண்டது.

அதில், வாரத்துக்கு ஒருநாள் அல்லது 2 நாட்கள் உண்ணாவிரதம் இருப்பது உடல் நலத்துக்கு நன்மை தருவதுடன் நீண்டநாள் உயிர் வாழமுடியும் என தெரிய வந்துள்ளது.

ஏனெனில் உண்ணா நோன்பை கடைபிடிப்பதன் மூலம் அல்சமீர்ஸ், மறதி நோய், பக்கவாதம் உள்ளிட்ட நோய்கள் மூளையை தாக்க கூடிய எதிர்ப்பு மிகவும் குறைகிறது.

குறைவான அளவு உணவு சாப்பிடுவதால் மூளைக்கு அதில் உள்ள ரசாயன கடத்திகள் குறைவான அளவு சக்தியை மட்டுமே கொண்டு வருகின்றன. இதன் மூலம் மூளையில் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு இல்லை என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வெற்றிகரமாக தொடக்கத்தில் இந்த ஆய்வு எலி மற்றும் சுண்டெலிகளிடம் நடத்தப்பட்டு வெற்றிகரமாக முடிந்தது. அதே விளைவு மனிதர்களின் உடலிலும் ஏற்பட்டதை தற்போது நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்.

எனவே, உடல் நலத்தை பேணி பாதுகாத்து நீண்ட நாட்கள் உயிர்வாழ உண்ணா நோன்பை கடைபிடிக்கலாம்.

institute's laboratory of neurosciences ஐச் சேர்ந்த பேராசிரியர் Mark Mattson என்பவரது தலைமையிலான குழுவே மேற்படி ஆராய்ச்சியை மேற்கொண்டு முடிவினை அறிவித்துள்ளது

நாய்ப் பால் குடிக்கும் இந்திய சிறுவன்! (காணொளி இணைப்பு)

இந்தியாவின் 05 வயதுச் சிறுவன் ஒருவர் பசிக் கொடுமை காரணமாக நாய் ஒன்றிடம் இருந்து பால் குடித்து வருகின்றார். கடந்த ஒரு வருடமாக இவர் நாய்ப் பால் குடிக்கின்றார்.ஆயினும் மிகவும் நலமாக உள்ளார். நாய்ப் பாலின் சுவை இவருக்கு மிகவும் பிடித்தும் உள்ளது.நாயும் இவர் மீது பிள்ளைப் பாசத்தை காட்டுகின்றது





-----

கீழே விழாதவாறு பான் கேக்கினை அடுக்கி உலக சாதனை

அவுஸ்திரேலியாவில் கோதுமை மா, முட்டை, பால் இவற்றைப் பயன்படுத்தி செய்யப்படும் தட்டையான வடிவமுடைய கேக்(பான் கேக்) மிகவும் பிரபல்யமானதாக காணப்படுகிறது. மேலும் இதற்காக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அங்கு இடம்பெறும் பான்கேக் பந்தயத்தில் கலந்து கொள்வார்கள். இதில் வினோதமான விடயம் என்னவென்றால் அவுஸ்திரேலியர்களுக்கு இந்த பான்கேக்கிற்கு கோதுமை மா, முட்டை, பால் பயன்படுத்துவது பற்றி இதுவரையில் தெரியாது என்பதாகும்.
-



previous home
சினிமா செய்திகள்
இணையத்தள விளம்பரங்கள்
சாதனை செய்திகள்
தொழில்நுட்ப செய்திகள்
விஞ்ஞான செய்திகள்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: சின்னத்தம்பி சின்னப்பு
பிறந்த இடம்: ஆழியவளை
வாழ்ந்த இடம்: இந்தியா திருச்சி
பிரசுரித்த திகதி: 14 பெப்ரவரி 2012
விளம்பரங்கள்
ADD
ADD
 
Copyright © 2011. புதிய உலகம்.கொம் . All Rights Reserved
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
This site Maintain by . Inspired from www.puthiyaulakam.com